புதன், 19 அக்டோபர், 2011

தந்தையே......(கவிதை)

தந்தையே...
வாழ்க்கை தந்த
உன் பெருமையை
எந்தக் கவிதையால்
சொல்லிவிட முடியும்?


உழைத்துக் களைத்த
உன் கை கால்களை
மிதிக்கச் சொல்வாய்...
அறியாத வயதில்
மிதித்ததை நினைத்து
இதயம் வலிக்குதப்பா!
இப்போதென்றால்
முத்தம் வைத்திருப்பேன்!

உனக்கு ஆடை வாங்கும்போது
விலையைப் பார்ப்பாய்!
எனக்கு மட்டும்
தரத்தைப் பார்ப்பாய்...

என்னுடைய
வெற்றிகளுக்குப் பின்னால்
நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக